இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி
X
பள்ளபட்டி சிப்காட் அருகே நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி. காவல் துறையினர் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சிப்காட் அருகே மதுரை to திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிமார் நகர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளப்பட்டி , தேவர் நகரை சேர்ந்த சின்னகோனார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான சின்னக்கோனாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story