தடை செய்யப்பட்ட ஒலிப்பான்களை பயன்படுத்திய பேருந்துகளுக்கு அபராதம்
மதுரை மாநகர் பகுதிகளில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்,,இசை ஒலிப்பான்.. மற்றும் காற்று மாசு(air pollution )ஏற்படுத்தும் ஒலிப்பான் (musical horn.. Air horn) பயன்படுத்தி வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மதுரை மாநகர காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை, மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர்களால் இணைந்து வாகன தணிக்கை மற்றும் பரிசோதனை செய்து அத்தகைய காற்று மாசுதல் ஏற்படுத்தக்கூடிய (air pollution ) ஒலிப்பான்களை பயன்படுத்தி வந்த வாகனங்களை பரிசோதனை செய்து அதற்கு அபராதம் விதித்து அந்த ஒலிப்பான் குழாய்களை இன்று ( ஜூலை.10) பறிமுதல் செய்தனர். இதில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் 20 பேருந்துகளுக்கு அபராத விதித்து ஒலிப்பான்களே பறிமுதல் செய்தனர். மேலும் அத்தகைய வாகனங்களுக்கு மேற்கொண்டு இயக்கி வந்தால் அதனது பெர்மிட் என்று சொல்லக்கூடிய அனுமதி சீட்டை ரத்து செய்ய விடும் என்று எச்சரித்து அனுப்பப்பட்டனர்... மேலும் இத்தகைய பரிசோதனையானது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்று மூன்று துறைகளும் இணைந்து அறிவித்தனர்.. இந்த சோதனையில் காவல்துறையின் சார்பாக திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, கரிமேடு போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சந்தனகுமார், வடக்கு ஆர்டிஓ சித்ரா, தெற்கு ஆர்டிஓ கார்த்திகேயன், மத்திய ஆர் டி ஓ பாலமுருகன்.. மற்றும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் செல்வம், முரளி,மனோகரன் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குணசீலன் கிருஷ்ண பிரசாத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





