ராசிபுரத்தில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி..

X
Rasipuram King 24x7 |10 July 2025 9:00 PM ISTராசிபுரத்தில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தீடீரென ராசிபுரத்தில் மழை பெய்தது. இதனால் வெப்பச்சலனம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
