லஞ்சம்: மின்வாரிய உதவி பொறியாளர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள வெங்டேசபுரம், இனகபீரணப்பள்ளியைச் சேர்ந்த கதிரப்பா, இவர் கோழிப் பண்ணை அமைப்பதற்காக உயர் அழுத்த மின் கம்பத்தை அமைக்க ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். அத்திமுகம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று உதவி பொறியாளர் உதயகுமாரைச் சந்தித்து தனது கோரிக்கை மீதான நடவடிக்கை குறித்து கேட்டார். அப்போது, தனக்கு லஞ்சமாக ரூ. 15 ஆயிரம் தந்தால் தான் கம்பத்தை இடமாற்றம் செய்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் கதிரப்பாவிடம் உதயகுமார் பணம் வங்கிய போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்
Next Story

