போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார கூட்டம்

மதுரை நரிமேடு பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (10.07.2025) மதுரை நரிமேடு பகுதியில் உள்ள, ஜோதி மேல்நிலைப் பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 206 வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story