அரக்கோணத்தில் ரயில் மோதி முதியவர் பலி

X
அரக்கோணத்தை அடுத்த மணவூர் ரயில் நிலையம் அருகே நேற்று முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் மோதி இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

