சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி
X
ஒட்டன்சத்திரம் அருகே புலியூர் நத்தம் பகுதியில் சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வெங்காய லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தபோது தவறி கீழே விழுந்து பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story