ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம்

ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம்
X
கூட்டம்
ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டம் வாணாபுரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகர்பாபு வரவேற்றார். உதவியாளர் பிரபாகரன் மன்ற பொருள் வாசித்தார். கூட்டத்தில், வரவு, செலவு கணக்கு விபரங்கள் உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டக்குழு பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கணக்காளர் முத்துசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
Next Story