அஜித்குமார் குடும்பத்திற்கு வழங்கிய இடம் ஆய்வு செய்யப்படும் - ஆட்சியர்

அஜித்குமார் குடும்பத்திற்கு வழங்கிய இடம் ஆய்வு செய்யப்படும் - ஆட்சியர்
X
மடப்புரத்தில் இளைஞர் அஜித்குமார் குடும்பத்திற்கு வழங்கிய இடம் குறித்து ஆய்வு செய்யப்படும் என ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா், தனிப்படை போலீஸாா் விசாரணையின் போது அடித்து கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து அரசு சாா்பில் அஜித்குமாா் குடும்பத்துக்கு 3 சென்ட் இலவச மனையும், அவரது சகோதரருக்கு ஆவின் நிா்வாகத்தில் பணி ஆணையும் அண்மையில் வழங்கப்பட்டது. இதனிடையே தனக்கு ஆவின் நிா்வாகத்தில் வேலை வழங்கியதில் திருப்தி இல்லை. மதுரையில் ஏதேனும் ஒரு துறையில் வேலை வழங்க வேண்டும். இலவச மனையும் தேளி கிராமத்துக்கு அருகே அடிப்படை வசதி, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் வழங்கியதால் அதுவும் பயனில்லை என அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் அண்மையில் அதிருப்தி தெரிவித்தாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்துள்ளதாவது: இதுகுறித்து அஜித்குமாா் குடும்பத்தினா் எழுத்துப்பூா்வமாக மனு அளித்தால்தான் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், மடப்புரம் நகா்ப் பகுதிக்குள் வருவதால் அஜித்குமாா் குடும்பத்துக்கு அந்தப் பகுதியில் வீட்டு மனை ஒதுக்க முடியவில்லை. அதனால்தான் தேளி பகுதியில் வீட்டுமனை வழங்கப்பட்டது. இதுதொடா்பாக அஜித்குமாரின் குடும்பத்தினா் அதிருப்தி தெரிவித்ததால், வேறு இடம் இருக்கிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன் என தெரிவித்துள்ளார்
Next Story