சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட

சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட
X
சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் கிழக்கு பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள 18வது வார்டு வடக்கு மலையடிப்பட்டி, குலாலர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, காமராஜபுரம், எம்ஜிஆர் நகர் 1. எம்ஜிஆர் நகர் .2 உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று பகலில் சஞ்சீவி மலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றியது. ஒரு பகுதியில் பற்றிய நெருப்பு காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களிடையே அச்சமும், நகர் மக்களிடையே பெரும் பரபரப்பும் காணப்பட்டது.
Next Story