ஆணைகுளத்தம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்!

X
வேலூர் ஆணைகுளத்தம்மன் கோயிலின் 24ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, இன்று (ஜூலை 11) 251 பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த விழாவிற்கு, முன்னாள் கவுன்சிலர் சீனிவாச காந்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் கலந்து கொண்டு பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

