கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

X
தூத்துக்குடி அருகே கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. கடந்த 17.06.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு பகுதியில் வைத்து ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்று கொலைமுயற்சியில் ஈடுபட்ட வழக்கில் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை (34) என்பவரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று முறப்பநாடு காவல் நிலைய போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

