ஒசூர் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோவிலில் குரு பூர்ணிமா வழிபாடு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ராகு கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ஆனி மாத பெளர்ணமியை ஒட்டி குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யபட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். தொடர்ந்து. இரவு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. பின்னர் மங்கள தீபாராதனை காணபிக்கபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story

