திருத்தங்கல்லில் ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.....!!

திருத்தங்கல்லில் ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.....!!
X
திருத்தங்கல்லில் ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.....!!
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.....!! சிவகாசி அருகே திருத்தங்கல்லில், 108 திவ்ய தேசத்தில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஆனிமாத பிரம்மோற்சவ விழா கடந்த4- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீநன்ற நாராயண பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற பக்தி கோஷம் முழங்கியபடி தேரை இழுத்து வழிபட்டனர். தேரோட்டத்தில் பெண் பக்தர்கள் பஜனை பாடியும், கோலாட்டம் ஆடியும் பக்தி பரவசமடைந்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து திருவிழா வரும் 16-ம் தேதி வரை நடைபெற்று புஷ்ப யாகத்துடன் நிறைவு பெறுகிறது.
Next Story