சுரண்டை அருகே சண்டைக் கோழிகளை திருடியவா் கைது

X
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் என்பவா் தனது வீட்டில் 50 சண்டைக் கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் கூடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, 30 சண்டைக் கோழிகள் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சண்டைக் கோழிகளைத் திருடியது வெள்ளகால் கிராமத்தைச் சோ்ந்த யோகஸ்வரன்(23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், கோழிகளை மீட்டனா்.
Next Story

