விபத்தில் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் பலி

X
குமரி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அரிகர புத்திரன் என்ற மோகன் (67). இவர் முன்னாள் தோவாளை ஒன்றிய திமுக செயலாளராவார்.இவரது மனைவி உமா (57). இவர்கள் இருவரும் இன்று காலையில் இறச்ச குளத்தில் உள்ள ஒரு நிச்சயதாம்பூல நிகழ்ச்சி சென்று விட்டு வீட்டிற்க்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். செக்கடி ஊர் அருகே நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ள்னர்கள். அதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அவரது மனைவி உமா லேசான காயங்களுடன் நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story

