தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களை முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களை முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல நல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் ஒரு சிறப்பான திட்டம். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கடைகோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நல திட்ட உதவிகளும், மறுவாழ்வு சேவைகளும் இல்லம் தேடி சென்றடைய வேண்டும் என்பதே. மேலும் இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உரிமைகள் திட்டத்தின் கீழ் சீட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்களப்பணியாளர்கள் மூலம் நகர்புறம் மற்றும் ஊரக பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளையும். பொதுமக்களையும் மொபைல் ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் இறுதிவரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் 2 ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆகையால் உங்கள் இல்லம் தேடி வரும் முன் களப்பணியாளர்கள் கேட்கும் ஆவணங்களை வழங்கி பொது மக்கள் (ஆதார் கார்டு, ரேசன் கார்டு) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (ஆதார் கார்டு. ரேசன் கார்டு மருத்துவ சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை சரிபார்க்க மட்டுமே) அனைவரும் இந்த சமூக தரவு கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுக்கும் பணி சிறப்பாக அமைய உதவிட வேண்டும் எனவும், மேலும் இது தொடர்பான விவரங்கள் தேவையிருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story