தேன்கனிக்கோட்டை: யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தடிக்கல் கிராமம் அருகே இன்று காலை ஒற்றை யானை இருப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள்தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டிய போது வேட்டை தடுப்பு காவலர் நீலகண்டன் (28) என்பவரை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரைமீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

