ராமநாதபுரம் நண்பர்கள்அறக்கட்டளை சார்பாக அரசு பள்ளிகள் தத்தெடுக்க முடிவு

ராமநாதபுரம் நண்பர்கள்அறக்கட்டளை சார்பாக  அரசு பள்ளிகள் தத்தெடுக்க முடிவு
X
பின்தங்கிய நிலையில் உள்ள 2 அரசு பள்ளிகளை தத்தெடுக்க நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை முடிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 அரசு பள்ளிகளை தத்தெடுக்க நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை முடிவு. பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய கலைகளை கற்றுக் கொடுக்க இருப்பதாக அறக்கட்டளையின் சேர்மன் ரமேஷ் கண்ணன் தகவல். இராமநாதபுரத்தில் நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளையின் சேர்மன் ரமேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்: நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆண்டுதோறும் செய்து வருகின்றது. அதன் படி இந்த ஆண்டு அறக்கட்டளையின் 11ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரையில் ஆகஸ்ட் 18ம் தேதி மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நலத்திட்ட உதவிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் இதில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு 3 சக்கர வாகனமும், அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த 10 அரசு பள்ளிகளை சேர்ந்த முதல் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு 60 நபர்களுக்கு மடிக்கணினி வழங்க உள்ளோம். அதேபோல் இராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் சேர்க்கையில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 அரசு தொடக்கப் பள்ளிகளை தத்தெடுத்து அதில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் தனி திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், பள்ளியின் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸாக யோகா, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகள் பயிற்றுவிக்கப்பட உள்ளது. மேலும் அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி கனவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு நிதி உதவியும், சுய தொழில் செய்கின்ற எளிய நிலையில் இருக்க கூடிய 10 குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான நிதி உதவியும் வழங்கப்பட்டும். மேலும் அறக்கட்டளையின் அனைத்து மாவட்ட தலைமை நிர்வாகிகள், முதன்மை பயனாளர்கள் மற்றும் பயனாளிகள், பி.ஆர்.கே என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளும், பங்குதாரர்களின் பங்கு தொகை DD மற்றும் காசோலை மூலம் வழங்கப்படும் என நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளையின் சேர்மன் ரமேஷ் கண்ணன் தெரிவித்தார்.
Next Story