தேவூர் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீ பசுபதிநாதர் கோவிலில்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீ பசுபதிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மகா கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைப்பெற்றது. கும்பாபிஷேகம் விழா, கடந்த 10 -ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பஞ்சகவ்ய பூஜை, கோ பூஜை, லெஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், முதல்கால யாக சாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜையோடு பூர்ணாஹூதி தீபாராதனை நடைப்பெற்று வந்தது. நேற்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று, பூர்ணாஹூதி தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் ஒலிக்க ஆலய கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து, புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை நடைப்பெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story





