நாகரசம்பட்டி அருகே மணல் கடத்தி லாரி பறிமுதல்- டிரைவர் கைது

X
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெய்னுார் தென்பெண்ணை ஆற்றின் அருகே நாகரசம்பட்டி போலீசார் நேற்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் மணலை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரி பறிமுதல் செய்த போலீசார் நெடுங்கல் பகுதியை சேர்ந்த அரவிந்தன்( 30) டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

