ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
X
ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பூங்குன்றநாடு கண்டவராயன்பட்டி மற்றும் பையூர் இளைஞர்களால் ஆடி திருவிழாவை முன்னிட்டு 2ஆம் ஆண்டு மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்-பொன்னமராவதி நெடுஞ்சாலையில் நடுமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடு மாட்டு பிரிவில் 18 ஜோடிகளும், 2 சுற்றுகளாக நடைபெற்ற சின்ன மாட்டு பிரிவில் 35 ஜோடிகள் என மொத்தம் 53 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. நடுமாட்டுக்கு 7 கிலோமீட்டர் தொலைவும், சின்ன மாட்டுக்கு 5 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி தொடங்கியது. போட்டியில் சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று திரளான பார்வையாளர்கள், மாட்டுவண்டி ரசிகர்கள் என அனைவரும் சாரதிகளை உற்சாகப்படுத்தி ஆர்வமுடன்கண்டுகளித்தனர்.ஸபோட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும், பரிசு கோப்பைகளும் விழாகுழு சார்பில் வழங்கப்பட்டது.
Next Story