தேவையற்ற பிரச்சனைகள், புகார்களை தவிர்க்க மாவட்ட காவல்துறை சிறப்பு திட்டம்..

இன்று என் கூடலூர் பகுதியில் நடைபெற்றது
நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகள் இருதரப்பினரையும் கண்காணிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தியது பாடி ஓன் கேமரா திட்டம், இத்திட்டத்தின் மூலம் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகள், புகார்களை தவிர்க்க மாவட்ட காவல்துறை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது...... தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அமைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டுவரப்படுகிறதா என காவல்துறையினர் நாள்தோறும் தீவிர வாகன தணிகையில் ஈடுபட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு சோதனைசாவடிகளில் வாகனத்தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினரிடம் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஏற்படுவதாக அடிக்கடி புகார்கள் வருவதாக கூறப்படும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் முதல் முறையாக பாடி ஓன் கேமரா திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. போலீசார் அணியும் இந்த கேமரா மூலம் இரு தரப்பினரையும் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் போலீசாரிடையே ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கும் நடவடிக்கையை மாவட்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது. வாகனத்தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் இந்த கண்காணிப்பு கேமராவை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் எனவும் இதன் மூலம் பதிவாகும் காட்சிகள் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவாகும் என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாகன விதிமுறை மீறல்கள் மற்றும் வாகன குற்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என காவல்துறை அறிவித்துள்ளது.
Next Story