கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்.தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு...
கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்.தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு... நீலகிரி மக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேட்டி... கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . குறிப்பாக கேரள எல்லையோரம் உள்ள நீலகிரி மாவட்டத்தின் சோதனை சாவடிகளான கீழ்நாடுகாணி , தாளூர், பிதர்காடு போன்ற சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ கூறுகையில் :- நீலகிரியில் நிபா வைரஸ் பரவல் இல்லை என்பதால் எல்லோரும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறியவர் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக கூறினார். தற்போது 24 மணி நேரமும் சுகாதாரத் துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகளை கண்காணித்து வருவதாக குறிப்பிட்டவர், தேவைப்பட்டால் கூடுதலாக சுகாதாரத்துறையினர் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
Next Story



