ஆற்று மணல் திருடிய வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ் பாய்ந்தது

ஆற்று மணல் திருடிய வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ் பாய்ந்தது
X
முறப்பநாடு பகுதியில் ஆற்று மணல் திருடிய வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ் பாய்ந்தது
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆற்று மணல் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. கடந்த 26.06.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லோடு வேனில் ஆற்று மணல் திருடிய வழக்கில் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த வேல் மகன் பெருமாள் (25) என்பவரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று முறப்பநாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story