புகையிலை பொருட்கள் ஒழிப்பு பணி

X
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் கொட்டாரம் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் அடங்கிய குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 42 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு, கடை மூடப்பட்டது.மேலும் , அந்த கடை உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

