மேலவாழக்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலவாழக்கரை ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, திருக்குவளை கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஏ.பிரபு தலைமை வகித்தார். முகாமில், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு, நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், தீவன அபிவிருத்தி, தாது உப்பு கலவை அளித்தல், பண்ணை ஆலோசனை வழங்கப்பட்டது . மேலும், முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம்,. கருவூட்டல், சினைப் பரிசோதனை, ஆய்வக பரிசோதனை மற்றும் நோய் எதிர்ப்பு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டது. பின்னர், சிறப்பாக கிடேரி கன்று கால்நடைகளை பராமரிக்கும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசுகள் மற்றும் 20 பயனாளிகளுக்கு தீவன விதைகள் வழங்கப்பட்டது. முகாமில், கால்நடை உதவி மருத்துவர்கள் பாலக்குறிச்சி கு.சிவசங்கர், வேளாங்கண்ணி மு.சுரேஷ்குமார், விழுந்தமாவடி ந.பிரசாந்த், கால்நடை ஆய்வாளர் எஸ்.அன்பிற்கரசி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஏ.விமலா, உதவியாளர் கே.ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



