கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர்.

உசிலம்பட்டி அருகே கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உசிலம்பட்டி ஒன்றியம் எருமார்பட்டி கிராமத்தில் திருக்கோயிலில் இன்று (ஜூலை 16) முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரார்த்தனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முன்னாள் எம்எல்ஏ நீதிபதி தலைமையில் முன்னாள் அமைச்சர் துணைத் தலைவர் உதயகுமார் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் உசிலம்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story