பைக் - அரசு பஸ் மோதல் வாலிபர் உயிரிழப்பு

X
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (50). அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தடம் எண் 81 சி என்ற அரசு பேருந்து கருங்கல் பகுதியில் இருந்து நித்திரவிளை நோக்கி ஓட்டி சென்றார். அப்போது காஞ்சாம்புறம் பகுதியில் வைத்து எதிரே அதிவேகமாக வந்த பைக் ஒன்று அரசு பேருந்து மீது மோதி உள்ளது. இதில் பைக்கில் பயணம் செய்த கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்ற தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் மணிகண்டன் சிகிட்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

