வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் சார்பாக நேற்று (ஜூலை.16)நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 66 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோரிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் துணை ஆணையர்கள் , உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
Next Story



