நாமக்கல் மாநகரத்துக்கு மத்திய அரசு விருது! மேயர் மற்றும் துணை மேயர் பெற்று கொண்டனர்.!

நாமக்கல் மாநகரத்துக்கு மத்திய அரசு விருது! மேயர் மற்றும் துணை மேயர் பெற்று கொண்டனர்.!
X
தூய்மை இந்தியா திட்டத்தினை ( Swachih Survekshan 2024-25 ) சிறப்பாக செயல்படுத்தி தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாநகராட்சிக்கு டெல்லியில் Ministry of Housing and Urban Affairs சார்பில் நடைபெற்ற விழாவில் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நாட்டில் தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட 23 நகரங்கள் பாராட்டுதல்களைப் பெற்றன.அதில் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.புதுதில்லியில் நடந்த விழாவில், விருது வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தினை ( Swachih Survekshan 2024-25 ) சிறப்பாக செயல்படுத்தி தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாநகராட்சிக்கு டெல்லியில் Ministry of Housing and Urban Affairs சார்பில் நடைபெற்ற விழாவில் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பியை அவரது டெல்லி முகாம் அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் து.கலாநிதி,துணை மேயர் செ‌.பூபதி,துப்பரவு அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Next Story