சோழவித்தியாபுரம் புனித சந்தன மாதா திருத்தலம் ஆண்டு திருவிழா

கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகை மாவட்டம் சோழவித்தியாபுரத்தில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் தாயான, புனித சந்தன மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில், நேற்று முன்தினம் இரவு ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட பொருளாளர் எஸ்.ஜேசுராஜ்   தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சாகுபடிக்கு தேவையான நீர் கிடைத்து விவசாயம் செழிக்க சிறப்பு திருப்பலி கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, பேண்ட் வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், கண்கவர் வாண வேடிக்கையுடன் புனிதம் செய்யப்பட்ட கொடி  ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. விழாவில், கேகே பட்டி பங்கு தந்தை டி. டேவிட் தனராஜ், சோழவித்தியாபுரம் திருத்தல பேராலய தந்தை எஸ்.டேவிட் செல்வகுமாா், சோழவித்தியாபுரம் கிறிஸ்தவ சமுதாய தலைவா் வீ.சுந்தர்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச்செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பெரிய தோ் பவனி வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.
Next Story