ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரைகள், திட்டங்கள் மற்றும் காப்புரிமைகள் குறித்த திறமையான எழுத்துப் பயிற்சி உதகையில் துவங்கியது

ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரைகள், திட்டங்கள் மற்றும் காப்புரிமைகள்  குறித்த திறமையான எழுத்துப் பயிற்சி உதகையில் துவங்கியது
X
ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்
"ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரைகள், திட்டங்கள் மற்றும் காப்புரிமைகள் குறித்த திறமையான எழுத்துப் பயிற்சி குறித்தஉயிர்க்கெமிக்கல் அறிவியல் தொடர்புகளின் கலை"என்ற கருபொருளில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் இன்று தொடங்கியது ஜெ.எஸ்.எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் (JSSAHER) ஒரு உறுப்புக் கல்லூரியான ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரி விழாஆரங்கில் இன்று, ஜூலை 18 மற்றும் 19, 2025 ஆகிய தேதிகளில் "ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரைகள், திட்டங்கள் மற்றும் காப்புரிமைகள் குறித்த திறமையான எழுத்துப் பயிற்சி: உயிர்க்கெமிக்கல் அறிவியல் தொடர்புகளின் கலை" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கத்தை வெற்றிகரமாக தொடங்கியது இக்கருத்தரங்கம், உயிர்க்கெமிக்கல் துறையில் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் அறிவியல் தொடர்பாடல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது தொடக்க விழா சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்ற மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே. கவுதமராஜன் வரவேற்புரை வழங்கினார். கருப்பொருளை விளக்கும் உரையை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என். ஜவஹர் வழங்கினார். தலைமை விருந்தினராக டாக்டர் எம். ஜே.என் சந்திரசேகர், தலைவர், உயிரியல் அறிவியல் பள்ளி, JSSAHER, ஊட்டி, திறமையான ஆராய்ச்சி பரப்புரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் கே.பி. அருண் தலைமை உரையை வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து வந்த பங்கேற்பாளர்கள் , தலைமை உரையாசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் என 150 பேர் கலந்து கொண்டுள்ளனர் இன்றும் நாளையும் பல்வேறு கலந்துறையாடல்கள் விளக்கஉரைகள் நடைபெற்று நாளை மாலை நிறைவு விழா நடைபெறுகிறது
Next Story