பல்நோக்கு மருத்துவப் பிரிவை அமைச்சர் திறந்து வைத்தார்.

பல்நோக்கு மருத்துவப் பிரிவை அமைச்சர் திறந்து வைத்தார்.
X
பல்நோக்கு மருத்துவப் பிரிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்: அமைச்சர் கீதாஜீவன்
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுப்பின்படி, பல்நோக்கு மருத்துவப் பிரிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி பி&டி காலனி மடத்தூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இன்று பல்நோக்கு மருத்துவப் பிரிவினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திறந்து வைத்து சிகிச்சை முறையினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னெடுப்பின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பிரிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுநல மருத்துவம், மகப்பேறு மருத்தும், குழந்தைகள் நலன், கண், பல், மனநல மருத்துவம், தோல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிடைக்கிறது என்றால், மக்களுக்கு தேவையான சிகிச்கைகளை வசிக்கின்ற இடத்திலேயே கொண்டு சேர்க்கக்கூடிய வகையில் பணியினை செய்து வருகிறார்கள். ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணம் வெற்றிகரமாக இருக்கும். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களின் சார்பாக நன்றியை கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், மாமன்ற உறுப்பினர்கள் இசக்கியப்பன், கண்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story