நாகர்கோவிலில் வாலிபர் மர்ம சாவு 

நாகர்கோவிலில் வாலிபர் மர்ம சாவு 
X
தனிப்படை விசாரணை
நாகர்கோவில் வடசேரி மேல  கலுங்கடியை சேர்ந்தவர் கார்த்தி (31).  கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திக்,  மதியம்,  மேல கலுங்கடி  பத்திரகாளியம்மன் கோயில் வாசலில் கார்த்தி மயங்க நிலையில் கிடந்தார்.  அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பரிசோதனையில் கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக  கூறினர். வடசேரி இன்ஸ்பெக்டர் உமா மற்றும் போலீசார் சென்று விசாரித்து கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கார்த்தி மது அருந்திய இடத்திற்கு செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.  மேலும் அவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட  பகுதிகளிலும் கேமராக்கள் உள்ளன.  இந்த கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  கடைசியாக கார்த்திகை அழைத்துச் சென்ற நண்பர்கள் யார்?  என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Next Story