அ.தி.மு.க., திண்ணை பிரச்சாரம்

அ.தி.மு.க., திண்ணை பிரச்சாரம்
X
பிரச்சாரம்
வாணாபுரம் அடுத்த கடம்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், மணலுார்பேட்டை நகர செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு ஆகியோர் பங்கேற்று அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். முக்கிய தெருக்கள் வழியாக நடந்து சென்று திண்ணை பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினர்.
Next Story