கிராமங்களில் குவியும் வவ்வால்கள் - 'நிபா' வைரஸ் அச்சத்தில் மக்கள்

X
கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவி வரும் நிலையில், திண்டுக்கல்லில் உள்ள மரங்களில் வாழும் வவ்வால்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வவ்வால்கள் உமிழ்நீர் மற்றும் அவை சாப்பிட்ட பழங்களை உட்கொள்வதன் மூலம் 'நிபா' வைரஸ் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய் கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே சுகாதாரத்துறையினர் தமிழகத்துக்குள் அனுமதிக்கின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தல் உள்ள கிராமங்களில் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் விளைநிலங்களை ஒட்டியுள்ள மரங்களில் வவ்வால்கள் அதிக அளவில் குவிந்துள்ளன. ஒரே மரத்தில் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வசிப்பதால், அப்பகுதி மக்கள் 'நிபா' வைரஸ் பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
Next Story

