வெள்ளகோவில் அருகே பைக் மோதி மூதாட்டி சாவு

X
வெள்ளகோவில் மேட்டுப்பாளையம் கிராமம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜோதிமணி (வயது 73). 100 நாட்கள் திட்ட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று விட்டு நடந்து சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கச்சேரி வலசை சேர்ந்த உதயவர்மராஜ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஜோதி மணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

