ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதல் வாலிபர் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதல் வாலிபர் உயிரிழப்பு
X
ஆலமரத்தில் பைக் மோதல் வாலிபர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலகுத்தபாஞ்சான் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் ஹரி கிருஷ்ணன்(45). இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனா். அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். ஆலங்குளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நண்பா்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு தனது பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டி்ருந்தாராம். ராம் நகா் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் நின்ற ஆலமரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரி கிருஷ்ணன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Next Story