சிவன் கோவிலில் ஏகாதச ருத்ர மஹாயாகம்

சிவன் கோவிலில் ஏகாதச ருத்ர மஹாயாகம்
X
கள்ளியங்காடு
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் ஏகாதச ருத்ர மஹா யாகம் நடைபெற்றது. மஹா யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளை சிவாகம பாஸ்கர சிவஸ்ரீ லக்ஷ்மண குமார சிவம் தலைமையில் ஆலய அர்ச்சகர்கள் சிவஸ்ரீ அசோக்குமார் பட்டர், சிவஸ்ரீ வெங்கட்ராமன் ஆகியோர் செய்தனர். யாகத்தைத் தொடர்ந்து மதியம் மணிக்கு சிறப்பு தீபாராதனை, அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருவாசக சபை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Next Story