ராஜாக்கமங்கலம்: மளிகை கடைக்காரரை கொலை

ராஜாக்கமங்கலம்:  மளிகை கடைக்காரரை கொலை
X
இரவில் பைக்கில் வந்தவர்கள்
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (63). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 25, 22 வயதுகளில் 2 பிள்ளைகள் உள்ளனர் . இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது தாயாருடன் வசித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சுவாமிதாஸ் கவிதா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சகோதரி கிருஷ்ணபாய் வீட்டில் சுவாமிதாஸ் தங்கி இருந்து, சகோதரியின் கணவர் வைத்துள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு இடையே நேற்று இரவு கடையில் சுவாமிதாஸ் மட்டும் இருந்துள்ளார். இரவு சுமார் 10 மணி அளவில் ஒரு பைக்கில் இரண்டு பேர் வந்துள்ளனர். கடையில் இருந்த சுவாமிதாசை அறிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளனர். ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சுவாமிதாஸுக்கு லட்சுமிபுரத்தில் வீட்டு மனையுடன் கூடிய 45 சென்ட் இருந்து வருவதாகவும் அந்த நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி தருமாறு மனைவி கேட்டுள்ளார். ஆனால் சுவாமிதாஸ் கொடுக்க மறுத்துள்ளதால் தான் சகோதரனை கொலை நடந்துள்ளதாக அவர் புகாரில் கூறியுள்ளார். இது ராஜகமங்கலம் போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து சுவாமி தாஸ் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story