போச்சம்பள்ளி: லாரி மீது டூவீலர் மோதி பேக்கரி கடிகாரம் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் தம்பிதுரை (22). பேக்கரி கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு தட்ரஅள்ளி-அகரம் சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது எதிர்பாரத விதமாக மோதியது.இந்த விபத்தில் தம்பிதுரை படுகாயம் அடைந்த அவரை மீட்டு காரி மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே தம்பிதுரை உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

