குற்றாலம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளா் உயிரிழப்பு

X
தென்காசி மாவட்டம் கடையம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ப. ராமசாமி (48), மின்வாரியத்தின் குற்றாலம் பிரிவில் மின்விநியோகப் பிரிவு மின்பாதை ஆய்வாளராக கடந்த 6 மாதங்களாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை, குற்றாலம் அருகே மின்நகா் நூலகத் தெருவிலுள்ள மின்மாற்றியில்(டிரான்ஸ்பாா்மா்) அவா் ‘ப்யூஸ்’ போடும் பணியில் ஈடுபட்டாராம். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் உயிரிழந்தாா். குற்றாலம் காவல் உதவி ஆய்வாளா் முத்துதிலகா் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்; மேலும், விசாரித்து வருகின்றனா்.
Next Story

