மருத்துவ நிதி உதவி வழங்கிய சேடப்பட்டி மணிமாறன்.

மருத்துவ நிதி உதவி வழங்கிய சேடப்பட்டி மணிமாறன்.
X
மதுரை அருகே கள்ளிக்குடி நிகழ்ச்சியில் மருத்துவ செலவிற்காக சேடப்பட்டி மணிமாறன் நிதி உதவி வழங்கினார்.
மதுரை ‎திருமங்கலம் கள்ளிக்குடி வடக்கு ஒன்றியம் அரசபட்டியில் நேற்று (ஜூலை.23) இரவு நடைபெற்ற கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ‎‎கள்ளிக்குடி ஒன்றியம் டி.அரசபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் பாண்டி - போதும் பொண்ணு அவர்கள் 16-வயதுடைய அவர்களின் மகன் கௌதம் என்பவரின் பார்வைக் குறைபாட்டிற்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவ நிதிஉதவி வேண்டி மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறனிடம் கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக மருத்துவ செலவிற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 50,000 பணத்தை சேடப்பட்டி மணிமாறன் வழங்கினார். ‎உடன் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர். ‎
Next Story