கள்ளக் காதலனை கொன்ற கணவர் கைது.

X
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கல்குவாரியில் பொக்லைன் இயந்திரம் ஆப்பரேட்டராக பணியாற்றிய யோகேஷ்வரன் (22) என்பதும் அதே கல்குவாரியில் பணியாற்றிய ராஜேஸ் (35) என்பவரின் மனைவியுடன் யோகேஷ்வரன் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழகி தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் மனைவி, யோகேஷ் இருவரையும் பலமுறை கண்டித்தும் தகாத உறவை கைவிட மறுத்ததால், யோகேஷ்வரனுக்கும் ராஜேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்று (ஜூலை.24) அதிகாலை மோதல் முற்றியதால் யோகேஷ்வரனை கட்டையால் சராமரியாக தாக்கி கொலை செய்து விட்டு ராஜேஷ் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Next Story

