சூரியகர், சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் நிறுவ ஆர்வமுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்லாம்.

X
1 KW சோலார் பேனல் அமைத்தால் ரூ 30,000 மானியமும், 2 KW சோலார் பேனல் அமைத்தால் ரூ.60,000 மானியமும், 3 KW அல்லது அதற்கு மேல் சோலார் பேனல் அமைத்தால் ரூ.78,000 மானியமும் வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள மின்சார அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டம் சூரியகர், சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் நிறுவ ஆர்வமுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்லாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள "சூரியகர் சூரிய ஒளி மின் திட்டம்" குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளில் சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் நிறுவுவதால் வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் யூனிட்களை மின் உபயோகத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின் உள்கட்டமைப்பு மானியம் (SUBSIDY) கிடைக்கும், மின்சார கட்டணத்தில் அதிக அளவிலான சேமிப்பு கிடைக்கும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, பசுமை ஆற்றல் உற்பத்தியில் பொதுமக்களும் இணைந்து பங்காற்ற முடியும், தகுதி உள்ள பொதுமக்கள் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து சூரிய ஒளி திட்டத்தின் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் 1 KW சோலார் பேனல் அமைத்தால் ரூ 30,000 மானியமும், 2 KW சோலார் பேனல் அமைத்தால் ரூ.60,000 மானியமும், 3 KW அல்லது அதற்கு மேல் சோலார் பேனல் அமைத்தால் ரூ.78,000 மானியமும் வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள மின்சார அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story

