கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

X
தூத்துக்குடி மாவட்டம், புதூர் மெயின் ரோடு அருகே கடந்த 2019ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த பால்பாண்டியன் மகன் வடிவேல் முருகன் (40/19) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் அற்புதசெல்வம் (எ) ஆஸ்வின் (33/25) என்பவரை புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-IIல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் முனியசாமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
Next Story

