ஓவியத்தில் அசத்திய சிறுவன், பாராட்டு தெரிவித்த கலெக்டர்

X
சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த பாலு -ஜாஸ்மின் தம்பதியின் மகன் கேப்ரியோ அக்னி(6) . இவா் 3 வயதிலிருந்து ஓவியம் வரையத் தொடங்கினாா். இவா் பென்சில் காந்தம் போன்ற நவீன ஓவிய முறைகளை கற்று 200-க்கும் மேற்ப்பட்ட ஓவியங்கள் வரைந்து இந்திய உலக சாதனை புத்தகம், நோபல் உலக சாதனைப் புத்தகம், லண்டன் உலக சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளாா். இந்நிலையில் மாணவன் கேப்ரியோ அக்னியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தி. சினேகா பராராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
Next Story

