சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

X
காஞ்சிபுரம் தாமல்வார் தெரு வழியாக, கோனேரிகுப்பம், ஏனாத்துார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு 'மேன்ஹோல்' வழியாக ஒரு வாரமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைகிறது. எனவே, தாமல்வார் தெருவில், பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

