ராசிபுரம் ஸ்ரீ காளியம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு ஐம்பதாயிரம் வளையல் அலங்காரம்..

X
Rasipuram King 24x7 |25 July 2025 8:21 PM ISTராசிபுரம் ஸ்ரீ காளியம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு ஐம்பதாயிரம் வளையல் அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி ரயில்வே நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ காளியம்மனுக்கு 50,000 வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story
